பேருந்தில் முதியவரின் போன் ஆட்டை
பெரம்பூர், கொளத்துார், எஸ்.ஆர்.பி., காலனியைச் சேர்ந்தவர் சந்திரசேகர், 60. இவர், நேற்று காலை 8:00 மணியளவில், பெரம்பூர் ரயில் நிலையம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் இருந்து தடம் எண்: 142 பேருந்தில் ஏறி, வீட்டுக்கு சென்றார். பேருந்தில் சென்று கொண்டிருந்த போதே, சட்டை மேல்பாக்கெட்டில் வைத்திருந்த 25,000 ரூபாய் மதிப்பிலான இவரது மொபைல் போன் திருட்டு போனது. இது குறித்து செம்பியம் போலீசார் விசாரிக்கின்றனர்.