உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  அனுமதியின்றி கட்டிய சர்ச் கட்டடம் போராட்டத்தால் இடிக்காத அதிகாரிகள் நீதிமன்றம் உத்தரவிட்டும் இரு ஆண்டாக இதேநிலை

 அனுமதியின்றி கட்டிய சர்ச் கட்டடம் போராட்டத்தால் இடிக்காத அதிகாரிகள் நீதிமன்றம் உத்தரவிட்டும் இரு ஆண்டாக இதேநிலை

குரோம்பேட்டை: அஸ்தினாபுரத்தில் அனுமதியின்றி கட்டிய சர்ச் கட்டடத்தை இடிக்கப் போவதும், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்வோரால் அதிகாரிகள் பணி முடிக்காமல் திரும்புவதும் இரு ஆண்டுகளாக நடக்கிறது. தாம்பரம் மாநகராட்சி, அஸ்தினாபுரம், ராஜேந்திர பிரசாத் சாலை, அண்ணா நகரில் சர்ச் உள்ளது. அனுமதியில்லாமல் கட்டப்பட்டுள்ளதாக, தனி நபர் ஒருவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், 'சர்ச்'யினை இடித்து அப்புறப்படுத்த, 2023, மார்ச் மாதம் உத்தரவிட்டது. இதற்கிடையே,பல்வேறு காரணங்களால் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, 2025, டிச., 5க்குள் சர்ச் கட்டடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்றும், தவறும்பட்சத்தில், டிச., 8ம் சி.எம்.டி.ஏ., உறுப்பினர் செயலர் மற்றும் தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் நேற்று, சர்ச் இடித்து அகற்ற, பொக்லைன் இயந்திரம் மற்றும் பணியாளர்களுடன், மாநகராட்சி அதிகாரிகள் சென்றனர். அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். அப்போது, சர்ச் இடிக்க எதிர்ப்பு தெரிவித்து, 500க்கும் மேற்பட்டோர் கைகளில் பதாகைகளை ஏந்தியும், சர்ச் வளாகத்தில் அமர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதால், மதியத்திற்கு மேல் இடிக்க மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், அப்போதும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலையாததால், சர்ச் கட்டடம் இடிப்பது தற்காலிகமாக நிறுத்தப்பட்டு, மாநகராட்சி அதிகாரிகள் திரும்பி சென்றனர். இரு ஆண்டுகளாக இதேபோல் திரும்புவதாக, அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை