உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் திருவூறல் உற்சவம்  

பார்த்த சாரதி பெருமாள் கோவிலில் திருவூறல் உற்சவம்  

சென்னை: திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் திருவூறல் உற்சவம் இன்று நடக்கிறது. திருவிழாக்கள் இல்லாத நாளில் பார்த்தசாரதி பெருமாள் ஆற்றங்கரையில் ஒய்வு எடுத்து திரும்பும் நிகழ்வு திருவூறல் உற்சவம் எனப்படுகிறது. சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் உற்சவர் திருவூறல் உற்சவத்தின்போது, திருவல்லிக்கேணியில் இருந்து ஈக்காட்டுத்தாங்கலில், அடையாறு ஆற்றங்கரை வரை சென்று திரும்புவார்.இந்த ஆண்டிற்கான திருவூறல் உற்சவத்தை முன்னிட்டு, இன்று அதிகாலை புறப்பட்டு மயிலாப்பூர், ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், தி.நகர், சைதாப்பேட்டை வழியாக காலை 11:30 மணிக்கு ஈக்காட்டு தாங்கல் ஆற்றங்கரையை சென்றடைகிறார். மதியம் அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடக்கிறது. அங்கிருந்து மாலை புறப்பட்டு இரவு கோவிலை வந்தடைகிறார். வீதி உலாவின்போது, வயதானவர்கள், நடக்க முடியாதவர்களுக்கு பெருமாள் தரிசனம் தரும் வகையில் மண்டகப்படி எனும் நடைமுறையும் உள்ளது.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை