உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  3 வழித்தட 9 ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம்

 3 வழித்தட 9 ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றம்

சென்னை: சென்னை ரயில்வே கோட்டத்தில், சென்ட்ரல் - அரக்கோணம் தடம் உட்பட மூன்று வழித்தடங்களில் இயங்கும், ஒன்பது மின்சார ரயில்களின் நேரம் நாளை முதல் மாற்றப்பட உள்ளது. சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிவிப்பு: திருத்தணி- - சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில், அரக்கோணத்தில் காலை 5:50 மணிக்கு பதிலாக, அதிகாலை 5:55 மணிக்கு சென்றடையும்.  அரக்கோணம் - - சென்னை சென்ட்ரலுக்கு புறப்படவேண்டிய மின்சார ரயில், காலை 9:50 மணிக்கு புறப்படும். திருத்தணி -- சென்னை சென்ட்ரலுக்கு புறப்படும் ரயில், பிற்பகல் 2:40 மணிக்கு பதிலாக, பிற்பகல் 2:55 மணிக்கு அடையும்  சென்னை கடற்கரை - - கும்மிடிப்பூண்டிக்கு இரவு 8:05 மணிக்கு புறப்படும். சூலுார்பேட்டை - - சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9:00 மணிக்கு பதிலாக இரவு 9:05 மணிக்கு புறப்படும்  கும்மிடிப்பூண்டி -- சென்னை சென்ட்ரலுக்கு இரவு 9:40 மணிக்கு புறப்படும்  செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மாலை, 6:05 மணிக்கு புறப்படும்  செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு மாலை 6:30 மணிக்கு புறப்படும்  செங்கல்பட்டு - சென்னை கடற்கரைக்கு இரவு 10.:20 மணிக்கு புறப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி