உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணியில் 93 மி.மீ., மழை நீர்மட்டம் உயர்வு

சிறுவாணியில் 93 மி.மீ., மழை நீர்மட்டம் உயர்வு

கோவை/;சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 93 மி.மீ., மழை பதிவாகியுள்ளது; நீர்மட்டம், 22.63 அடியாக உயர்ந்தது.கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழைப்பொழிவு காணப்படுகிறது. இதன் காரணமாக, வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை உருவாகியுள்ளது.மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில், கேரள வனப்பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 93 மி.மீ., மழை பதிவாகியிருக்கிறது. அடிவாரத்தில், 30 மி.மீ., மழை பெய்துள்ளது.மழையின் காரணமாக, அணையின் நீர்மட்டம், 22.63 அடியாக உயர்ந்துள்ளது. ஒரு வாரத்துக்கு மிதமானது முதல், கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக, அணைகளுக்கு நீர் வரத்து அதிகரிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை