உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ஏ.ஜே.கே., கல்லுாரி கால்பந்து போட்டி 5 புள்ளிகளுடன் அயோத்திய அணி வெற்றி

ஏ.ஜே.கே., கல்லுாரி கால்பந்து போட்டி 5 புள்ளிகளுடன் அயோத்திய அணி வெற்றி

கோவை:ஏ.ஜே.கே., ஐவர் கால்பந்து போட்டியில் அயோத்தியா அணி வெற்றி பெற்றது.கோவை நவக்கரையில் அமைந்துள்ள ஏ.ஜே.கே., கல்லுாரி, டர்ப் டென் 5 நவீன கால்பந்து விளையாட்டு மைதானத்தில், ஏ.ஜே.கே., டர்ப் டென் 5 சார்பில் மாணவர்களுக்கான ஐவர் கால்பந்து போட்டி நடைபெற்றது. நாடு முழுவதிலுமிருந்து, 30க்கும் மேற்பட்ட அணிகள் இப்போட்டியில் பங்கேற்றன.நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில், முதல் இடத்தை அயோத்தியா கால்பந்து அணி, 5 புள்ளிகளுடன் வெற்றி பெற்றது. ஒரு புள்ளியுடன் பிரண்ட்ஸ் கால்பந்து அணி இரண்டாவது இடத்தையும், 3 புள்ளிகளுடன் ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் கால்பந்து அணி மூன்றாவது இடத்தையும், 2 புள்ளிகள் பெற்று, நேரு கலை அறிவியல் கல்லுாரி அணி நான்காவது இடத்தையும் பெற்றது.முதலிடம் வென்ற அயோத்தியா கால்பந்து அணிக்கு பரிசுக்கோப்பையும், ரூ.10 ஆயிரம் பரிசுத்தொகையும், இரண்டாம் இடம் வென்ற பிரண்ட்ஸ் கால்பந்து அணிக்கு ரூ. 7ஆயிரத்துடன், பரிசுக்கோப்பையும், மூன்றாம் இடம் வென்ற ஏ.ஜே.கே., ஸ்ட்ரைக்கர்ஸ் கால்பந்து அணிக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் பரிசுக்கோப்பையும், நான்காம் இடம் வென்ற நேரு கலை அறிவியல் கல்லுாரி அணிக்கு பரிசுக்கோப்பையும் வழங்கப்பட்டது.ரொக்கப்பரிசு மற்றும் கோப்பையை, ஏ.ஜே.கே., கலை, அறிவியல் கல்லுாரியின் துணை முதல்வர் தினேஷ்குமார் வழங்கி வாழ்த்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









புதிய வீடியோ