உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

மின் நுகர்வோர் குறை தீர் கூட்டம்

கோவை: குனியமுத்துார், மாநகர் மற்றும் கு.வடமதுரை மின் வாரிய அலுவலகங்களில், மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நாளை நடக்கிறது.குனியமுத்துார் மின் வாரிய அலுவலகத்தில், காலை 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (தெற்கு) சுப்ரமணியன் பங்கேற்கிறார்.மாநகர் மின் வாரிய அலுவலகத்தில், காலை 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (மாநகர்) சதீஷ்குமார் பங்கேற்கிறார்.கு.வடமதுரை மின் வாரிய அலுவலகத்தில், காலை 11:00 மணிக்கு நடக்கும் கூட்டத்தில், மேற்பார்வை பொறியாளர் (வடக்கு) விஜயகவுரி பங்கேற்கிறார்.இந்த மின் வாரிய அலுவலகங்களுக்கு உட்பட்ட மின் நுகர்வோர், கூட்டத்தில் பங்கேற்று, தங்கள் மின் இணைப்பு உள்ளிட்ட மின் வாரியம் தொடர்பான புகார்களை நேரில் தெரிவித்து பயனடையலாம். இத்தகவலை, செயற்பொறியாளர்கள் சுரேஷ் (குனியமுத்துார்), பசுபதீஸ்வரன் (மாநகர்) மற்றும் சண்முகசுந்தரம் (கு.வடமதுரை) தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை