உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சவரத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

சவரத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம்

கோவை:தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்க பொதுக்குழு கூட்டம், மாநகர் மாவட்ட தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது.கூட்டத்தில், 'வரும் கல்வி ஆண்டு முதல், அரசுப் பள்ளிகளில் பயின்று 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெறும் மாணவ, மாணவியருக்கு ஊக்கத்தொகை வழங்குவது, வீடற்ற சவரத் தொழிலாளர்களுக்கு அரசின் அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு பெற்றத்தர நடவடிக்கை எடுப்பது' என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநகர மாவட்ட பொருளாளர் வேலுசாமி, செயலாளர் மகேந்திரன், அமைப்பு செயலாளர் சசிகுமார், மாநில பொருளாளர் நடராஜன், தணிக்கைக் குழு தலைவர் குப்புசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை