உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பத்ம விருது பெற 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பத்ம விருது பெற 28க்குள் விண்ணப்பிக்க அழைப்பு

பொள்ளாச்சி;இந்திய அரசு வழங்கும் பத்ம விருதுக்கு தகுதி உரியவர்கள், ஜூன் 28க்குள் விண்ணப்பங்கள் அனுப்ப அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக, மேன்மை பொருந்திய பணிகளுக்காக, இந்திய அரசு பத்ம விருதுகள் (பத்ம விபூஷன், பத்ம பூஷன், பத்மஸ்ரீ) வழங்க அறிவித்துள்ளது.கலை, அறிவியல், இலக்கியம், விளையாட்டு, மருத்துவம், கல்வி, தொழில்நுட்பம், சமூக நலன், பொதுப்பணிகள், தொழில் மற்றும் இதர பிரிவுகளில் மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் அசாதாரணமான பணிகள் ஆற்றியவர்களுக்கு, 2025ம் ஆண்டு நடைபெற உள்ள குடியரசு தின விழாவில், பத்ம விருதுகள் வழங்கப்படும்.இவ்விருதுகள் தொழில், இனம், உத்தியோகம், பாலினம் ஆகியவற்றுக்கு வித்தியாசமின்றி வழங்கப்படும். விபரமறிய,https://awards.gov.inமற்றும் https://padmaawards.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து, ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.பூர்த்தி செய்த விண்ணப்பத்தின் மூன்று நகல்களை, ஜூன் 28க்குள் கோவை மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பங்கள், கலெக்டரின் பரிந்துரையுடன் அரசுக்கு அனுப்பப்படும் என,கோவைகலெக்டர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை