உள்ளூர் செய்திகள்

பருப்பு போளி

செய்முறை :

கடலை பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும். பருப்புடன் கொட்டி கால் கப் தண்ணீர் மற்றும் கால் ஸ்பூன் உப்பு சேர்த்து குக்கரில் மூன்று விசில் வரும் வரை வேக விடவும்.பாத்திரத்தில் வெல்லம் மற்றும் நீர் சேர்த்து உருக விடவும். உருகியதும் வடித்து தனியாக எடுத்துக்கொள்ளவும். அடுத்ததாக மற்றொரு பாத்திரத்தில் வடிகட்டிய வெல்லத்தை கொட்டி அதோடு வேக வைத்த பருப்பை நன்கு மசித்து அதில் கொட்டிக் கிளறவும். அதோடு துருவிய தேங்காய் சேர்த்துக்கொள்ளவும். வெல்லமும் பருப்பும் நன்கு கலந்து சற்று கெட்டிப் பதத்திற்கு வந்ததும் அணைத்துவிடவும்.மாவு பிசைய மைதா மாவு, மஞ்சள், உப்பு , நெய் ஊற்றி பிசைந்துகொள்ளவும். அதோடு இரண்டு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி பிசையவும். மாவு இலகிய பதத்தில் இருக்க வேண்டும். அப்போதுதான் மென்மையாக இருக்கும்.பிசைந்த மாவை கால் மணி நேரம் மூடி ஊற வைக்கவும். பின் வாழை இலையில் எண்ணெய் தடவி அதில் பிசைந்த மைதா மாவை தட்டி அதோடு கடலைப் பருப்பையும் உருண்டையாகப் பிசைந்து அதில் வைத்து உருட்டிக்கொள்ளவும். பின் விரல்களால் தட்டையாக தட்டிக் கொண்டே இருங்கள்.தோசைக் கல்லில் போட்டு நெய் தடவி வாட்டி எடுக்கவும். மிதமான சூட்டில் வாட்டி எடுக்க வேண்டும். சுவையான பருப்பு போளி தயார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி