உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்

மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா நாளை துவக்கம்

மேட்டுப்பாளையம்:சிறுமுகையில் உள்ள மகா சக்தி மாரியம்மன் கோவில் திருவிழா, நாளை துவங்கி, அடுத்த மாதம் 9ம் தேதி வரை நடைபெற உள்ளது. சிறுமுகையில் சக்தி மெயின் சாலையில், சக்தி விநாயகர் மற்றும் மகா சக்தி மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலின், 24ம் ஆண்டு திருவிழா நாளை இரவு, 11:00 மணிக்கு கிராம சாந்தியுடன் துவங்குகிறது.29ம் தேதி பவானி ஆற்றில் ராமர் கோவில் படித்துறையில் இருந்து, தீர்த்த குடங்களை கோவிலுக்கு எடுத்து வருகின்றனர். புனித நீரால், விநாயகர், அம்மன், பாலமுருகன், நவகிரகங்களுக்கு தீர்த்த அபிஷேகம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து தீபாராதனை நடைபெறுகிறது. 30ம் தேதி காலை மகா கணபதி ஹோமமும், பவானி ஆற்றில் இருந்து வாணவேடிக்கையுடன், மேளதாளம் முழங்க, கோவிலுக்கு கம்பம் எடுத்து வருதலும், பின்பு பூச்சாட்டும், அதைத் தொடர்ந்து கம்பம் நடும் வைபவமும் நடைபெற உள்ளது.மே 1ம் தேதியிலிருந்து, ஏழாம் தேதி வரை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜையும், கம்பம் சுற்றி ஆடுதலும், தீபாராதனையும் நடைபெற உள்ளது. அன்று இரவு அம்மன் அழைப்பும், சக்தி கரகம் எடுத்து வருதலும், நடைபெற உள்ளது. எட்டாம் தேதி ராமர் கோவில் படித்துறையில் இருந்து, அம்மன் சக்தி கலசங்களும், படைக்களமும் அழைத்து வரப்படுகிறது. பின் காலை, 8:00 மணிக்கு திருக்கல்யாண சீர்வரிசை எடுத்து வருதலும், அதைத் தொடர்ந்து அம்மன் திருக்கல்யாண வைபவமும் நடைபெற உள்ளது.ஒன்பதாம் தேதி மஞ்சள் நீராட்டும், மறுபூஜையும் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ