உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

கோவை : மாவட்ட போலீஸ் எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம் நேற்று நடந்தது. எஸ்.பி., பத்ரிநாராயணன் தலைமையில் நடந்த முகாமில், மனுதாரர்கள் மற்றும் எதிர் மனுதாரர்கள் நேரில் வரவழைக்கப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டது.குடும்ப பிரச்னை, பணப்பரிமாற்ற பிரச்னை மற்றும் இடப்பிரச்னை என, 82 மனுக்கள் மீது விசாரணை மற்றும் மறுவிசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதில், மூன்று மனுக்கள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 74 மனுக்களுக்கு சுமுகமான முறையிலும், எட்டு மனுக்கள் மீது மேல்விசாரணை செய்யவும், பரிந்துரைக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை