உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்

பொது வினியோக திட்ட குறை தீர்க்கும் முகாம்

உடுமலை : உடுமலை பகுதியில் பொது வினியோக திட்ட சிறப்பு குறை தீர்க்கும் முகாம், வரும், 15ம் தேதி, காலை, 10:00 மணி முதல், மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.உடுமலை தாலுகாவில், ராகல்பாவி தொடக்கவேளாண் கூட்டுறவு கடன் சங்க வளாகத்திலும், மடத்துக்குளம் தாலுகா, சங்கராமநல்லுார், ருத்திராபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க வளாகத்திலும் நடக்கிறது.இம்முகாமில், ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கம், முகவரி மாற்றம், மொபைல் எண் பதிவு, மாற்றம் செய்தல், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் உள்ளிட்ட ரேஷன் கார்டு தொடர்பான கோரிக்கைகள் உடனடியாக தீர்வு காணப்படும்.எனவே, பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி