உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அனுமதி குதுாகலத்தில் சுற்றுலா பயணியர்

அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் அனுமதி குதுாகலத்தில் சுற்றுலா பயணியர்

வால்பாறை:கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை சாலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளால், சுற்றுலா பயணியர் அதிக அளவில் இங்கு சென்று வருகின்றனர்.இந்நிலையில், கடந்த மாதம் கேரள மாநிலம் அதிரப்பள்ளியில் பெய்த கனமழையால், நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணியர் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதனால், அவர்கள் ஏமாற்றமடைந்தனர். கடந்த ஐந்து நாட்களாக, கேரளாவில் மழைப்பொழிவு படிப்படியாக குறைந்து வருவதால், அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியில் நீர்வரத்து குறைந்து வருகிறது.இதனைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்ல சுற்றுலா பயணியரை வனத்துறையினர் அனுமதித்துள்ளனர். வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'மழைப்பொழிவு குறைந்ததால், சுற்றுலா பயணியர் மீண்டும் நீர்வீழ்ச்சியைக் காண அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் நீர்வீழ்ச்சியில் குளிக்கத் தடை; கண்டு ரசிக்கலாம்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ