உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  திறமை காட்டிய மாநகராட்சி மாணவர்கள்

 திறமை காட்டிய மாநகராட்சி மாணவர்கள்

கோவை, டிச. 26- 'தினமலர்' நாளி தழின் மாணவர் பதிப்பான 'பட்டம்' இதழ், இந்துஸ்தான் கல்விக் குழுமம் மற்றும் கோவை மாநகராட்சி இணைந்து நடத்தும் 'பதில் சொல் - பரிசை வெல்' வினாடி- வினா போட்டியில் பங்கேற்ற மாநகராட்சி பள்ளி மாணவர்கள், திறமைகளை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். மணியகாரம்பாளையம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 130 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'எப்' அணியின் பார்வதி ஜோதி, பிரீதி ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'எச்' அணியின் சன்மதி, புவனேஸ்வரி; 'ஏ' அணியின் கோகுல் கிருஷ்ணா, அழகு மீனா; 'பி' அணியின் அஜய், ஜகா; 'டி' அணியின் தயாளன், வின்சன் ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியர் அருள் சான்றிதழ்களை வழங்கினார். ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி: இப்பள்ளியில் நடைபெற்ற தகுதி சுற்றில் 120 மாணவர்கள் பங்கேற்றனர். இதில், 16 பேர் 8 அணிகளாக பிரிந்து பள்ளி அளவிலான இறுதி போட்டியில் பங்கேற்றனர். 'சி' அணியின் அஜய் கிருஷ்ணா, ஆதித்யா சர்க்கார் ஆகியோர் வெற்றி பெற்றனர். இவர்களுடன், 'ஏ' அணியின் விஷால், யோகேஷ்வரன்; 'எப்' அணியின் சக்தி மலையரசன், நிஷாந்த்; 'டி' அணியின் பரத், யோகசரவணன்; 'எச்' அணியின் நிகில் கிருஷ்ணா, ரமணா ஆகியோர் அரையிறுதிக்கு தகுதி பெற்றனர். தலைமையாசிரியர் சிவகுமார் சான்றிதழ்களை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை