| ADDED : ஜன 10, 2024 10:28 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி அடுத்த, முதலியார்பதியைச் சேர்ந்தவர் கார்த்திக்குமார். இவரது மனைவி நந்தினி, 27. கர்ப்பிணியான அவருக்கு நேற்றுமுன்தினம் மதியம், பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. வேட்டைக்காரன்புதுார் அரசு மருத்துவமனையில் இருந்து, '108' ஆம்புலன்ஸ் விரைந்தது.நந்தினியை அழைத்துக் கொண்டு, அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் புறப்பட்டது. டிரைவர் தங்கவேல், ஆம்புலன்ஸ் ஓட்டினார். மருத்துவ உதவியாளர் சிவசக்தி உடனிருந்தார். அங்கிருந்து, ஆம்புலன்ஸ் புறப்பட்ட ஒரு கி.மீ., துாரத்திலேயே நந்தினிக்கு பிரசவ வலி அதிகரித்தது. இதையடுத்து, மருத்துவ உதவியாளர் பிரசவம் பார்த்ததில், பெண் குழந்தை பிறந்தது. அதன்பின், தாயும், குழந்தையும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.