உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வளர்பிறை ஏகாதசி சிறப்பு வழிபாடு

வளர்பிறை ஏகாதசி சிறப்பு வழிபாடு

பொள்ளாச்சி; பொள்ளாச்சி, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது.அதன்படி, காலை, 10:30 மணிக்கு, உற்சவமூர்த்தி சுவாமிகளுக்கு திவ்ய திருமஞ்சனம் நடந்தது. இதற்காக, பக்தர்களிடம் இருந்து, பால், இளநீர், தேன், தயிர், திருமஞ்சன பொடி, மஞ்சள், சந்தனம், பன்னீர் உள்ளிட்டவை பெறப்பட்டது.தொடர்ந்து, காலை, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. பகல், 12:00 மணிக்கு தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடந்தது. இதில், பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை