உள்ளூர் செய்திகள்

தேய்பிறை அஷ்டமி விழா

அன்னுார்;திம்மநாயக்கன்புதுார் மகா பைரவர் கோவிலில், தேய்பிறை அஷ்டமி விழா இன்று நடக்கிறது.மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன்புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது. இன்று மாலை 6:00 மணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது.இதையடுத்து அலங்கார பூஜை, வேள்வி பூஜை நடக்கிறது. பக்தர்கள் விழாவில் பங்கேற்று இறையருள் பெற கோவில் கமிட்டியினர் அழைப்பு விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி