உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போதையில் கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு

போதையில் கத்தியால் வெட்டியவர் மீது வழக்கு

புவனகிரி : புவனகிரி அருகே குடிபோதையில் கத்தியால் வெட்டியவர் மீது வழக்குப் பதிந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். புவனகிரி அடுத்த சாத்தப்பாடியைச் சேர்ந்தவர் மதியழகன் இவர் குடிபோதையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். நிகழ்ச்சி முடிந்து அங்கு வந்த அதேப்பகுதியைச் சேர்ந்த மணிமாறன் என்பவரை திட்டியதால் தகராறு ஏற்பட்டது. இதில் அத்திரமடைந்த மதியழகன், மணிமாறன் தலையில் கத்தியால் வெட்டினார். காயமடைந்த அவரை சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து தலைமறைவான மதியழகனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ