உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

குண்டும், குழியுமான சாலை: வாகன ஓட்டிகள் அவதி

கடலுார் : கடலுாரில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.கடலுார் பச்சையாங்குப்பத்தில் இருந்து துறைமுகம் செல்லும் தார் சாலை உள்ளது. இச்சாலை வழியாக, தினந்தோறும் நுாற்றுக்கணக்கான வாகனங்கள் துறைமுகத்திற்கு சென்று வருகின்றன. இந்நிலையில், இச்சாலை தற்போது குண்டும், குழியுமாக மாறியுள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதேபோன்று, பச்சையாங்குப்பம் இரட்டை ரோடு சந்திப்பு பகுதியில் சாலையில் ஜல்லி கற்கள் சிதறி கிடக்கிறது. இதனால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி அவதியடைந்து வருகின்றனர். எனவே, துறைமுகம் சாலையை சீரமைக்கவும், இரட்டை ரோடு சந்திப்பில் சிதறிகிடக்கும் ஜல்லி கற்களை அகற்றவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ