உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேரோட்டம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேரோட்டம்

கடலுார் : கடலுார் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்.கடலுார் அடுத்த சிங்கிரிகுடியில் உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில்பிரம்மோற்சவ விழா கடந்த 14ம் தேதிதுவங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில்சாமி வீதியுலா நடந்து வருகிறது.18ம் தேதி கருட சேவை உற்சவம், நேற்று முன்தினம்காலை வெண்ணைத்தாழி அலங்காரத்தில் வீதியுலாநடந்தது.முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். மாலை 6:30 மணிக்கு தேரடி உற்சவம் நடந்தது.இன்று காலை 9:00 மணிக்கு மட்டையடி உற்சவம், 25ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை