உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / செங்கழனி மாரியம்மனுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்

செங்கழனி மாரியம்மனுக்கு செடலணிந்து நேர்த்திக்கடன்

விருத்தாசலம் : விருத்தாசலம் செங்கழனி மாரியம்மனுக்கு பக்தர்கள் பால்குடம், காவடி, செடலணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.விருத்தாசலம் பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவிலில், 42வது ஆண்டு ஆடி மாத செடல் திருவிழா, கடந்த 21ம் தேதி காப்புக்கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடக்கிறது. கடந்த 26ம் தேதி திருவிளக்கு பூஜை நடந்தது.முக்கிய நிகழ்வாக, நேற்று காலை 10:00 மணியளவில், மணிமுக்தாற்றில் இருந்து பால்குடம், காவடி சுமந்தும், செடலணிந்தும் பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு பாலபிேஷகம் செய்து சிறப்பு வழிபாடு நடந்தது. இரவு சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.இதேபோல், அண்ணா நகர் மாரியம்மன் கோவில், பாலாஜி நகர் முத்து மாரியம்மன் கோவில் உட்பட சுற்றியுள்ள அம்மன் கோவில்களுக்கு பக்தர்கள் பால்குடம் சுமந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி