உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் மோதி தம்பதி காயம்

பஸ் மோதி தம்பதி காயம்

விருத்தாசலம் : விருத்தாசலம் அருகே அரசு பஸ் மோதி காரில் சென்ற தம்பதி படுகாயமடைந்தனர்.சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் லோகேஷ், 33. இவர் தனது மனைவி கிரி நார்த்தனா, 30, ஒன்றரை வயது மகள் சியானா ஆகியோருடன் நேற்று சென்னையில் இருந்து காரில் கோவில்பட்டி நோக்கி சென்றார்.மங்கலம்பேட்டை புறவழிச்சாலையில் வந்தபோது, அரியலுார் - சென்னை சென்ற அரசு பஸ், கார் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இதில், லோகேஷ், கிரிநார்த்தனா பலத்த காயமடைந்தனர்.குழந்தை சியானா லேசான காயங்களுடன் தப்பினார்.மங்கலம்பேட்டை போலீசார் படுகாயமடைந்த தம்பதியை, விருத்தாசலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.விபத்து குறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை