உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மகள் மாயம்: தாய் புகார்

மகள் மாயம்: தாய் புகார்

நடுவீரப்பட்டு : நடுவீரப்பட்டு அருகே குழந்தையுடன் மகளைக் காணவில்லை என போலீசில், தாய் புகார் அளித்துள்ளார்.நெல்லிக்குப்பம், சோழவல்லியைச் சேர்ந்தவர் எஜமான். இவரது மனைவி லட்சுமி, 24; கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 3 வயதில் கீர்த்திகா என்ற மகள் உள்ளார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த 2 ஆண்டுகளாக லட்சுமி தனது மகளுடன், பாலுாரில் உள்ள தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.கடந்த 2 ம் தேதி மதியம் வீட்டிலிருந்து குழந்தை கீர்த்திகாவுடன் வெளியே சென்ற லட்சுமி வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இதுகுறித்து லட்சுமியின் தாய் வெள்ளையம்மாள் அளித்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ