உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ் மோதி முதியவர் பலி

பஸ் மோதி முதியவர் பலி

கடலுார், - கடலுார் முதுநகர் ஐந்து கிணற்று மாரியம்மன் கோவில் எதிரே, நேற்று முன்தினம் 65 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத முதியவர் சாலையை கடக்க முயன்றார். அப்போது, எதிர் திசையில் வந்த அரசு பஸ், முதியவர் மீது மோதியது. இதில், தலையில் படுகாயமடைந்த அவரை அருகிலிருந்தவர்கள் மீட்டு கடலுார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்லும் வழியில் அவர் இறந்தார்.இது குறித்து வி.ஏ.ஓ., சுந்தர்ராஜ், 35; என்பவர் கொடுத்த புகாரின்பேரில், கடலுார் முதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை