உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு

2 வீடுகளின் பூட்டை உடைத்து ரூ.3 லட்சம் நகைகள் திருட்டு

கடலுார்: கடலுாரில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து 6 சவரன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார், செல்லங்குப்பத்தைச் சேர்ந்தவர் ராமு, 43; இவர், நேற்று முன்தினம், குடும்பத்துடன் அய்யம்பேட்டையில் உள்ள குலதெய்வ கோவிலுக்கு சென்றார்.நேற்று காலை திரும்பி வந்தபோது, வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு 3 சவரன் நகை, 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிந்தது.மாடியில் உள்ள மாமியார் வீட்டிலும் பீரோ உடைக்கப்பட்டு 3 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரூபாயை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.திருடுபோன நகைகள் மதிப்பு 3 லட்சம் ரூபாய் ஆகும். புகாரின்பேரில் கடலுார் முதுநகர் போலீசார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை