உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 10ம் தேதி கிரிக்கெட் போட்டி பல மாவட்டத்தினர் பங்கேற்பு

10ம் தேதி கிரிக்கெட் போட்டி பல மாவட்டத்தினர் பங்கேற்பு

புவனகிரி: புவனகிரி தம்பிக்குநல்லாம்பட்டினம் டி.என்.பி., ராக்கர்ஸ் அணி சார்பில், முதல் முறையாக கிரிக்கெட் போட்டி வரும் 10ம் தேதி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிதம்பரம்- புவனகிரி சாலையில், தம்பிக்குநல்லாம்பட்டினம் கிராமத்தில் உள்ள மைதானத்தில் நடக்கிறது, சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன் துவக்கி வைக்கிறார். வெற்றி பெறும் முதல் ஐந்து அணிகளுக்கு பரிசு மற்றும் கோப்பைகள் மற்றும் சிறப்பு பரிசுகள் வழங்கப்படுகிறது. கடலுார் மற்றும் சுற்று பகுதி மாவட்டங்களை சேர்ந்த விளையாட்டு அணியினர் பங்கேற்றனர். ஆர்வமுள்ள கிரிக்கெட் அணியினர் பங்கேற்க தொடர்பு கொள்ளலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை