உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தேய்பிறை அஷ்டமி பூஜை

தேய்பிறை அஷ்டமி பூஜை

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு,சி.என்.பாளையம் சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.நடுவீரப்பட்டு காமாட்சியம்மன் சமேத கைலாசநாதர்,சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர்,மீனாட்சியம்மன் சமேத சொக்கநாதர் ஆகிய கோவில்களில் நேற்று இரவு தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது.பூஜையை முன்னிட்டு நேற்று இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து தீபாராதனை நடந்தது.பூஜையில் பக்தர்கள் கலந்து கொண்டு காலபைரவரை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி