உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / காதை கடித்து துப்பியவர் கைது

காதை கடித்து துப்பியவர் கைது

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அடுத்த கொழை கிராமத்தை சேர்ந்தவர்கள் சாமிநாதன்,53; ராஜதுரை,58; பக்கத்து, பக்கத்து வீட்டை சேர்ந்த இவர்களுக்குள் முன்விரோதம் உள்ளது.இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் அவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது, ராஜதுரை, அவரது மகன் பிரபாகரன்,32; இருவரும் சாமிநாதனின் மருமகளை திட்டினர். அதனை கண்டித்த சாமிநாதனை இரும்பு பைப்பால் தாக்கி அவரது காதை கடித்து துப்பினர்.சாமிநாதன் விருத்தசாலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீமுஷ்ணம் போலீசார் வழக்கு பதிந்து பிரபாகரனை கைது செய்தனர். ராஜதுரையை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ