உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்ணாபிேஷகம்

 புத்தேரி பெருமாள் கோவிலில் நாளை சொர்ணாபிேஷகம்

திட்டக்குடி: ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு, திட்டக்குடி அடுத்த புத்தேரி வரதராஜ பெருமாள் கோவிலில், நாளை சொர்ணாபிேஷகம் நடக்கிறது. அன்றைய தினம் அதிகாலை 5:00 மணியளவில், உலக மக்கள் நலன் பெற வேண்டி சிறப்பு திருமஞ்சனம்; 6:00 மணியளவில் மகா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, 7:00 மணியளவில் முன் மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் சுவாமிக்கு சொர்ணாபிேஷகம் பூஜை நடக்கிறது. பக்தர்களுக்கு நாணயம் பிரசாதமாக வழங்கப்படுகிறது. பூஜை ஏற்பாடுகளை, பஞ்சவடீ பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் தலைவர் கோதண்டராமன், புத்தேரி செல்வவிநாயகர் மற்றும் வரதராஜ பெருமாள் கோவில் தலைவர் தமிழ்மணி ராதாகிருஷ்ணன், ஆலய ஆலோசகர் ராதாகிருஷ்ணன் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை