உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணசாமி பள்ளியில் சைக்கிள் ஓட்டும் பயிற்சி

கிருஷ்ணசாமி பள்ளியில் சைக்கிள் ஓட்டும் பயிற்சி

கடலூர் : கடலூர் கிருஷ்ணசாமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் ஓட்டும் பயிற்சிக்கான தொடக்க விழா நடந்தது.பள்ளி தாளாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார்.செயலர் வக்கீல் விஜயகுமார் வாழ்த்திப் பேசினார். டி.எஸ்.பி., வனிதா மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.கண்மருத்துவரும், பள்ளி நிர்வாக இயக்குனருமான டாக்டர் சிரீஷா கண்ணன் பள்ளியின் சாரண சாரணியர் படை, செஞ்சிலுவை சங்கம், நாட்டுநலப்பணித் திட்டம், பசுமைப்படை ஆகியவற்றை துவங்கி வைத்தார். பள்ளி முதல்வர் நடராஜன் வரவேற்றார்.துணை முதல்வர் மனோன்மணி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி