உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ்சில் பிளாட்பாரம்உடைந்து பயணிகள் மீது சேறு

அரசு பஸ்சில் பிளாட்பாரம்உடைந்து பயணிகள் மீது சேறு

நடுவீரப்பட்டு: அரசு டவுன் பஸ்சில் பிளாட்பாரம் உடைந்துள்ளதால் பஸ்சினுள் பயணம் செய்யும் பயணிகள் மீது சேறு அடித்து வருகிறது.கடலூர்-பத்திரக்கோட்டைக்கு அரசு பஸ்(எண் டி.என்.32.,என்.1889) தடம் எண் 37 இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சின் கண்டக்டர் சீட்டின் முன் உள்ள சீட்டின் கீழ் பகுதியில் இரண்டு அடி அளவிற்கு பிளாட்பாரம் உடைந்து உள்ளது.இதனால் தற்போது திடீரென பெய்து வரும் மழையால் டயர்கள் வழியாக பஸ்சுக்குள் உள்ள பயணிகள் மீது சேறு வாரி அடித்து வருகிறது. இதனால் பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.ஆகையால் போக்குவரத்து அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி