உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக வர்த்தகர் சங்கம் உண்ணாவிரதம்

ன்னா ஹசாரேவிற்கு ஆதரவாக வர்த்தகர் சங்கம் உண்ணாவிரதம்

சிதம்பரம் : ஊழலுக்கு எதிரான அன்னா ஹசாரேவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அண்ணாமலை நகர் வர்த்தகர் சங்கம் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. அண்ணாமலை நகர் இன்ஜினியரிங் கல்லூரி அருகே வர்த்தகர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரதப் போராட்டத்திற்கு சங்கத் தலைவர் அருள் தலைமை தாங்கினார். செயலர் மகேஸ்வரன் வரவேற்றார். ராமதாஸ், அப்துல் ரியாஸ் முன்னிலை வகித்தனர். உண்ணாவிரதத்தில் மாரியப்பன், விஜயன், நோட்டரி பப்ளிக் ஜெயசங்கர், ஹரிதாஸ், நுகர்வோர் அமைப்பு அப்பாவு, கல்யாணசுந்தரம், கட்டுமான சங்கச் செயலர் தர்மலிங்கம், தையல் கலைஞர்கள் சங்க நாகராஜன், கட்டுமான சங்க நடராஜன், பாலாஜி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை