உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர்  பலி

பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர்  பலி

திட்டக்குடி: திட்டக்குடி அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த முதியவர் உயிரிழந்தார். திட்டக்குடி பஸ் நிலையத்தில் இருந்து ஆவட்டிக்கு நேற்று மாலை 4:00 மணியளவில் தனியார் பஸ் புறப்பட்டது. பெருமுளை அருகே சாலை வளைவில் பஸ் சென்றபோது படிக்கட்டு அருகே நின்றிருந்த 60வயது முதியவர் தவறி கீழே விழுந்தார். தலையில் படுகாயமடைந்தவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். திட்டக்குடி போலீசார் உடலை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, திட்டக்குடி போலீசார் வழக்குப் பதிந்து, இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை