உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது 

 டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது 

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூதாட்டியை போலீசார் கைது செய்தனர். மங்கலம்பேட்டை இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி மற்றும் போலீசார் நேற்று எடைச்சித்துார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அதேபகுதியை சேர்ந்த சின்னசாமி மனைவி சரோஜா, 61; என்பவர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்ததை கண்டறிந்தனர். இதுகுறித்து, மங்கலம்பேட்டை போலீசார் வழக்குப்பதிந்து, சரோஜாவை கைது செய்தனர். மேலும், அவரிடம் இருந்த குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை