உள்ளூர் செய்திகள்

 அமாவாசை பூஜை 

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் உள்ள குழந்தை சுவாமி சித்தருக்கு நேற்று கார்த்திகை மாத அமாவாசை சிறப்பு பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு காலை கணபதிஹோமமும், தொடர்ந்து மகா அபிஷேகமும் நடந்தது. மதியம் 12:30 மணிக்கு மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் உலா வந்து குழந்தை சுவாமி சித்தருக்கு கலச அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. அதேபோல, நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உள்ள பச்சைகேந்திரசுவாமி சித்தருக்கு சிறப்பு பூஜை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ