உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  நிகும்பலா யாகம்

 நிகும்பலா யாகம்

நடுவீரப்பட்டு: பிரத்தியங்கராதேவிக்கு நடந்த நிகும்பலா யாகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நடுவீரப்பட்டு, நரியன்ஓடை கரையில் பாதாள காளி மற்றும் பிரத்தியங்கரா தேவி கோவில்கள் உள்ளன. இந்த கோவிலில் நேற்று கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, பிரத்தியங்கராதேவிக்கு நிகும்பலாயாகம் நடந்தது. மதியம் 1:00 மணிக்கு பிரத்தியங்கரா தேவி மண்டபத்தில் யாக வேள்வி துவங்கியது. தொடர்ந்து, யாகவேள்வியில் மிளகாய் வற்றல் கொட்டப்பட்டு நிகும்பலா யாகம் நடந்தது. மகா பூர்ணாஹூதி நடந்து, யாகத்தில் வைக்கப்பட்ட கலசம் உலாவாக வந்து சுவாமிக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் 2:30 மணிக்கு பாதாள காளிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை