உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  இரிடியம் மோசடியில் கைதானவர் வீட்டில் போலீசார் சோதனை

 இரிடியம் மோசடியில் கைதானவர் வீட்டில் போலீசார் சோதனை

ராமநத்தம்: ராமநத்தம் அருகே இரிடியம் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீடு உள்ளிட்ட இடங்களில் சி.பி.சி.ஐ.டி., போலீசார் சோதனை நடத்தினர். கடலுார் மாவட்டம், ஆவினங்குடியை சேர்ந்த ராமர், கருவேப்பிலங்குறிச்சி கல்யாணசுந்தரம், இளங்கோவன் உள்ளிட்ட 4 பேர், சி.பி.சி.ஐ.டி., போலீசில் புகார் அளித்தனர். அதில், கடலுார் மாவட்டம், ராமநத்தம் அடுத்த அதர்நத்தம் கிராமத்தை சேர்ந்த செல்வம், 40, ஆவட்டியை சேர்ந்த பிரபு உள்ளிட்டோர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இரிடியத்தில் ஒரு லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், 6 மாதத்தில் ஒரு கோடி தரவதாகா என கூறினர். அதனை நம்பி, 4 பேரும் ரூ., 80 லட்சம் வழங்கினோம். ஆனால், அவர்கள் கூறியபடி பணம் தரவில்லை. நாங்கள் கொடுத்த பணத்தையும் தராமல் ஏமாற்றி வருகின்றனர் என புகார் அளித்தனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப் பதிந்து, கடந்த 10ம் தேதி அதர்நத்தத்தை சேர்ந்த செல்வம், 40; என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், ஆவட்டியை சேர்ந்த பிரபுடன் சேர்ந்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இந்நிலையில், நேற்று இரவு 9:00 மணியளவில் சி.பி.சி.ஐ.டி., போலீசார், செல்வத்தை அழைத்து வந்து அவருக்கு சொந்தமான அதர்நத்தம் கிராமத்திலுள்ள வீடு, தோப்பு வீடு ஆகிய இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை