உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பெட்டிக்கடைக்கு சீல் வைப்பு

பெட்டிக்கடைக்கு சீல் வைப்பு

கிள்ளை: கிள்ளையில் குட்கா பொருட்கள் விற்ற பெட்டிக்கடைக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.கிள்ளை சப் இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், மெயின்ரோடு பகுதி பெட்டிக்கடைகளில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முகமது யாசின், 50; என்பவரது பெட்டிக்கடையில், குட்கா பொருட்கள் விற்றது கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்து, கிள்ளை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.அதைதொடர்ந்து, உணவு பாதுகாப்பு அதிகாரி நல்லதம்பி, தலைமையிலான குழுவினர் முகமது யாசின் பெட்டிக்கடைக்கு, சீல் வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை