உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மலையாண்டவர் கோவிலில்  தெப்பல் உற்சவம்

மலையாண்டவர் கோவிலில்  தெப்பல் உற்சவம்

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையம் மலையாண்டவர் கோவிலில் நேற்று காணும் பொங்கலை முன்னிட்டு கரிநாள் திருவிழாவில் தெப்பல் உற்சவம் நடந்தது.சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ராஜராஜேஸ்வரர் கோவிலில் நேற்று முன்தினம்17 ம் தேதி புதன்கிழமை கரிநாள் திருவிழா நடந்தது.விழாவை முன்னிட்டு அன்று காலை 10:00 மணிக்கு பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11:30 மணிக்கு சிறப்பு தீபாராதனை, பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடந்தது.நேற்று 18 ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு கோவில் எதிரில் உள்ள குளத்தில் விநாயகர் தெப்பல் அடிக்கும் உற்சவம் நடந்தது. தெப்பல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு விநாயகரை வழிபட்டனர்.விழா ஏற்பாடுகளை நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் மற்றும் நிர்வாகக்குழுவினர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ