உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  திருவாசகம் முற்றோதல்

 திருவாசகம் முற்றோதல்

புவனகிரி: புவனகிரி பெருமாத்துார் மலையாளத்து சுவாமிகள் மடத்தில் திருவாசகம் முற்றோதல் நடந்தது. சிதம்பரம், தில்லை ஆடல் வல்லான் சிவனடியார்கள் திருவாசகம் முற்றோதல் அமைப்பு சார்பில் சிவன், அம்மன் உள்ளிட்ட கோவில்கள், மடங்களில் உலக நன்மை வேண்டியும், விவசாயம் மற்றும் தொழில் வளம் சிறக்கவும் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். புவனகிரி பெருமாத்துார் மலையாளத்து சுவாமிகள் மடத்தில் நடந்த முற்றோதல் நிகழ்ச்சியில், பொன்னுசாமி அன்னம் மடத்தின் அறக்கட்டளை நிர்வாகி முருகவேல் வரவேற்றார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் மோகன் திருவாசகம் முற்றோதலை துவக்கி வைத்தார். தில்லை அறக்கட்டளை நிர்வாகி திருநாவுக்கரசு, கருணாநிதி உள்ளிட்ட சிவ தொண்டர்கள் ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !