உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / யானை தாக்கி முதியவர் பலி

யானை தாக்கி முதியவர் பலி

பாலக்கோடு:தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த தீர்த்தாரஹள்ளியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 70, கூலித்தொழிலாளி. நேற்று காலை, பர்கூர் காப்புக்காடு மலைப்பகுதியிலிருந்து வந்த ஒற்றை யானை, பாலக்கோடு அடுத்த மணியக்காரன் கொட்டாய் கிராமத்திலுள்ள ஏரியில் முகாமிட்டிருந்தது. அதை வேடிக்கை பார்க்க சென்ற கிருஷ்ணனை, அந்த யானை தாக்கியதில், சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார், அவரது உடலை மீட்டு விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை