உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / அரசின் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் துவக்கம்

அரசின் போட்டி தேர்வுக்கான இலவச பயிற்சி மையம் துவக்கம்

அரூர், தர்மபுரி மாவட்டம், அரூரிலுள்ள காமாட்சியம்மன் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் டி.என்.பி.எஸ்.சி., குரூப் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி மையம் துவக்க விழா நேற்று நடந்தது. அரூர், 24 மனை தெலுங்கு செட்டியார்கள் சங்கம் சார்பில் நடந்த விழாவிற்கு, சங்க செயலாளர் சரவணன் தலைமை வகித்தார். செந்தில் குமார் வரவேற்றார். பயிற்சி மையத்தை சங்க தலைவர் அறிவழகன் திறந்து வைத்தார். நிர்வாகிகள் சேட்டு, மதன், செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்