தர்மபுரி அரசு கல்லுாரியில் விழிப்புணர்வு கருத்தரங்கு
தர்மபுரி, தர்மபுரி அரசு கலைக்கல்லுாரியில், பாலின உளவியல், பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரம், மற்றும் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. இதில், வக்கில் சுபஸ்ரீ, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செல்வம் பேசினார். கல்லுாரி முதல்வர் கண்ணன் தலைமை வகித்து பேசினார். தர்மபுரி வக்கீல் சங்க தலைவர் அழகுமுத்து, வக்கீல் முரளி ஆகியோர் மாணவ, மாணவியருக்கான விழிப்புணர்வு, பெண்களுக்கான சட்ட உரிமைகள், அதிகாரங்கள், பாலின உளவியல் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.