உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வாணியாறு அணை கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வாணியாறு அணை கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பாப்பிரெட்டிப்பட்டி: வாணியாறு அணை, 63 அடியை எட்டியதால், அணையின் பாது-காப்பு கருதி எந்நேரமும் அணையில் இருந்து உபரிநீர் திறக்க வாய்ப்பு உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்ச-ரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள வாணி-யாறு அணை, 65.27 அடி உயரம் கொண்டது. அணையில் நீர் நிரம்பினால், இடது மற்றும் வலதுபுற கால்வாய்கள் வழியாக, வெங்கடசமுத்திரம், மோளையானுார், ஆலாபுரம், பறையப்-பட்டி, தென்கரைகோட்டை உள்ளிட்ட, 20க்கும் மேற்பட்ட ஏரி-களில் நீர் நிரம்பி, 10,517 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். இதனால், பாப்பிரெட்டிப்பட்டி சுற்றுவட்டார பகுதி கிரா-மங்களில் நிலத்தடி நீர்மட்டம் உயரும். அணை நீர்மட்டம் தற்-போது, 63 அடியாக உயர்ந்துள்ளது. மழையால் ஏற்காடு மலையிலிருந்து தொடர்ந்து நீர்வரத்து உள்-ளதால், வாணியாறு அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதில் நீர்வரத்து வினாடிக்கு, 64 கன அடியாகவும், அணை நீர்மட்டம், 63 அடியாகவும், நீர் இருப்பு, 400.86 மில்லியன் கன அடியா-கவும் உள்ளது. அணை, 63 அடியை எட்டி விட்டதால், அணை பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் ஆற்றில் எந்நே-ரமும் திறந்து விடப்பட உள்ளது. இதனால், கரையோர பகுதியி-லுள்ள பொதுமக்கள் எச்சரிக்கையாகவும், தங்களது கால்நடை-களை ஆற்றுப்பகுதியில் மேய்ச்சலுக்கு விடாமல், பாதுகாப்பான பகுதிகளில் வைத்துக் கொள்ளவும், பொதுப்பணி துறையினர் எச்-சரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, வாணியாறு அணை உதவி பொறியாளர் மோகனா கூறியதாவது:வாணியாறு அணை, 65.27 அடி உயரம் கொண்டது. தற்போது அணை, 63 அடியை எட்டியுள்ளது. ஆகவே அணையின் பாது-காப்பு கருதி அணைக்கு வரும், 64 கன அடி தண்ணீர் உபரிநீராக ஆற்றில் எந்நேரமும் திறந்து விடப்பட உள்ளது. அது சமயம் ஆற்றோர பகுதிகளில் யாரும் தங்களது கால்நடைகளை மேய்ச்ச-லுக்கு விடவோ, ஆற்றில் பிடித்து செல்லவோ கூடாது. துணி துவைக்கவும், ஆற்றில் குளிக்கவும், ஆற்றை கடக்கவும் கூடாது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை