உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / வரட்டாறு தடுப்பணைக்கு தொடர்மழையால் நீர்வரத்து

வரட்டாறு தடுப்பணைக்கு தொடர்மழையால் நீர்வரத்து

அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த வள்ளிமதுரையில், வரட்டாறு தடுப்பணை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்-துள்ள சித்தேரி மலையில் இருந்து, தடுப்பணைக்கு நீர்வரத்து வருகிறது. இதிலிருந்து, திறந்து விடப்படும் நீரால், தாதரவலசை, கீரைப்-பட்டி, கெளாப்பாறை, எல்லப்புடையாம்பட்டி, அச்சல்வாடி, செல்லம்பட்டி உள்ளிட்ட, 15 கிராமங்களை சேர்ந்த, 5,108 ஏக்கர் பாசன வசதி பெறுவதுடன், 25 ஏரிகள் நிரம்பும். அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால், வரட்டாறு தடுப்பணைக்கு நீர்வரத்து வர துவங்கியது. கடந்த, 18ல், தடுப்பணையில் மொத்த கொள்ளளவான, 34.45 அடியில், 28 அடிக்கு நீர்மட்டம் இருந்தது. அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால், நேற்று காலை, 6:00 மணிக்கு தடுப்பணை நீர்-மட்டம், 29 அடியாக உயர்ந்தது. தடுப்பணைக்கு வினாடிக்கு, 20 கன அடி நீர்வரத்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை