உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / கூட்டுறவு நிறுவனங்களில் காலிபணியிடங்களுக்கு 26ல் நேர்முகத்தேர்வு

கூட்டுறவு நிறுவனங்களில் காலிபணியிடங்களுக்கு 26ல் நேர்முகத்தேர்வு

தர்மபுரி, : தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாக உள்ள உதவியாளர், எழுத்தர் பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு தர்மபுரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் கடந்த மாதம், 11ம் தேதி நடந்தது. எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு மற்றும் சிறப்பு தகுதிகள் தேர்வர்களின் விபரங்கள், தர்மபுரி மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையத்தின், http://www.drbharmapuri.net என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. நேர்முக தேர்வு, வரும், 26ம் தேதி நடக்கிறது. மேலும், நேர்முகத்தேர்வுக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ள தேர்வர்கள், தங்களது நேர்முகத் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை, http://www.drbharmapuri.net என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இவ்வாறு, மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்