உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு

சாலையை சீரமைக்க கோரி ஆர்.டி.ஓ.,விடம் மனு

அரூர் : சாலையை சீரமைக்க கோரி, அரூர் ஆர்.டி.ஓ., வில்சன் ராஜசேக-ரிடம், அரூர் அன்னை பசுமை பூமி துல்லிய பண்ணை விவசா-யிகள் சங்கத்தலைவர் திருமலை, அளித்துள்ள மனுவில் கூறியுள்-ளதாவது:அரூர் - சேலம் பிரதான சாலையில் இருந்து, டி.புதுாருக்கு செல்லும், 2 கி.மீ., தார்ச்சாலை ஜல்லிக்கற்கள் பெயர்ந்து, குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், கரும்பு, மரவள்ளிக்கி-ழங்கு, தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை எடுத்துச் செல்லும் விவ-சாயிகளும், பொதுமக்களும் அவதியடைகின்றனர். சில நேரங்-களில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி, காயமடைகின்றனர்.கடந்த, 4 ஆண்டுகளுக்கும் மேல், சேதமான சாலையை சீரமைக்-கக்கோரி, பலமுறை புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சேதமான சாலையை சீரமைக்க, நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்-.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை