உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தர்மபுரி / ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

ஆற்றில் குதித்து வாலிபர் தற்கொலை

பவானி, பவானி அருகே ஜம்பை, பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் ரகு, 35. இவர் டிராவல்ஸ் நடத்தி வந்தார். இவருக்கு மனைவி, ஒரு மகன் உள்ளனர். நேற்று மாலை, சேர்வராயன்பாளையத்தில் உள்ள புதிய ரவுண்டானா -மேம்பாலத்தின் மீது ஏறி, பவானி ஆற்றில் குதித்துள்ளார். அருகில் இருந்தவர்கள் பவானி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள், இறந்தவரின் சடலத்தை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ