உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திண்டுக்கல் / கொடைக்கானலில் சாரலுடன் பனிமூட்டம்

கொடைக்கானலில் சாரலுடன் பனிமூட்டம்

கொடைக்கானல்: திண்டுக்கல்மாவட்டம் கொடைக்கானலில் நேற்று சாரல் மழையுடன் பனிமூட்டம் நிலவியதால் வாகனங்கள் முகப்பு விளக்கு எரிய விட்டு சென்றன. தொடர் விடுமுறையடுத்து கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சில தினங்களாக முகாமிட்டனர். நேற்று காலை 11:00 மணியிலிருந்து அவ்வப்போது சாரலுடன் மிதமான மழையும் பெய்தது. பனிமூட்டம் சூழ்ந்ததால் வாகனங்கள் முகப்பு விளக்கை எரிய விட்டு சென்றன. சுற்றுலாப் பயணிகள் ஏரி சாலையில் குதிரை, சைக்கிள் சவாரி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ